திங்கள், 13 டிசம்பர், 2010

எம்.பி எனும் ஏழைகள் !

இட்லி 4 ரூ
தோசை12 ரூ
சாப்பாடு 30 ரூ டீ4 ரூ
என்று கடைகளில்
சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்
தமிழக மக்களுக்கு
ஒரு நற்செய்தி

இந்தியாவிலேயே
குறைந்த செலவில்
உணவு கிடைக்கும்
இடம் ஒன்று உள்ளது
அங்கு டீ 1 ரூ
சோப்பு 5.50 ரூ
சாப்பாடு 2 ரூ
சப்பாத்தி 1ரூ
சிக்கன் 24.50 ரூ
தோசை 4 ரூ
காய்கறிபிரியானி 8 ரூ
மீன் 13 ரூ

இந்த இடத்தில்தான்
இந்தியாவின் மொத்த
ஏழைகளும் சாப்பிடு
கிறார்கள்

அந்த ஏழைகளின்
மாத சம்பளம்
எவ்வளவு தெரியுமா ?
80,001

அந்த ஏழைகள் யார்
தெரியுமா ?
இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள்

உணவு கிடைக்கும்
இடம் நாடாளுமன்ற
உணவகம்

என்ன எல்லோரும்
நாடாளுமன்ற
உறுப்பினர் ஆக
தயார்ஆயிட்டீங்களா ?

வியாழன், 9 டிசம்பர், 2010

மரச்சிற்பங்கள்

தேழர்களே ...
நம் வீடுகளில் வரவேற்பறையை
அலங்கரிக்கவும்
குழந்தைகள் விளையாடவும்
மரத்தினாலான
பொம்மைகள்
வாங்குவீர்கள்
செலவும் அதிகம்
பிடிக்கும்

இதோ நீங்களே
செய்யும்படியான சில
எளிமையான மாதிரிகள்

உதிரிபாகங்களாக
செய்து அவைகளை
குழந்தைகளுக்கு
விளையாட
கொடுப்பதால்
பாகங்களை
இணைத்து உருவங்களை
உருவாக்குவதால்
குழந்தைகளின் அறிவும்
வளர்சியடைகிறது

முயற்சி செய்து
பாருங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

புதன், 1 டிசம்பர், 2010

மரச்சிற்பங்கள்

நீங்கள் கலைஞரா புதிதாக ஏதேனும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம்
உடையவரா

இதோ
உங்கள் குழந்தை விளையாட மரத்தினால் ஆன பொம்மைகளுக்கான
மாதிரிகள்

இந்த மாதிரிகளைப்
பார்த்து நீங்களே
உங்கள் அன்பு பாப்பாவுக்கு செய்து
கொடுங்கள்

சனி, 30 அக்டோபர், 2010

வாக்காளர்பட்டியலில் உங்கள் பெயர்பார்க்க

நாம் வாக்காளர் பட்டியலில்
பெயர்சேர்க்கவும்
எழுதிக் கொடுத்த பெயர் பட்டியலில்
இடம் பெற்றதா என்று
அறியவும் நாம் படாதபாடு பட்டிருக்கிறோம் இனி
கவலை வேண்டாம்

தேர்தல் ஆனையம்
வாக்காளர் பட்டியலை
இனையத்தில் வெளிவிட்டிருக்கிறது
இதன்மூலம் நம் பெயரை சரிபார்த்துக்
கொள்ளலாம்
முகவரி இதோ
www.elections.tn.gov.in/eroll/
( இதை கிளிக் செய்க )
இதில் முதலில்
மாவட்டம் பின் தொகுதி பெயரை கொடுக்க ஒரு அட்டவனை வரும் அதில் வாக்காளர்
பெயர், தாய் , தந்தை,
கணவர் பெயர்களை கொடுக் பட்டியலில் நம் பெயர் முகவரி
வாக்குச்சாவடி பெயர் என அனைத்து விவரங்களும் வருகிறது

தேர்தல்
ஆனையத்திற்கு நன்றி
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 14 அக்டோபர், 2010

புகைக்கும் தோழர்களே ...

கீழே உள்ள படங்களை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நண்பர் சந்ரமோகனிடம்
காட்டி என்ன சொல்ல
தோனுது என்றேன்

இதோ அவர் சொன்ன
தத்துவங்கள்


இவ்ளோ
குடிச்சானுகளே
ஒன்னாவது எனக்கு
கொடுத்தானுகளா
பாவிக


இதுல வாய்
எங்க
இருக்கு


பஞ்சு வந்தது கூட
தெரியல நாய
இனியாவது குழல்(PIPE)
வாங்கி சொருவிக்கோ


ரெம்ப யோசிக்காத
எல்லா எங்களோடதான்

ஒரு சிகரட் புகைய
எத்தன பேர்தான்டா
இழுப்பீங்க


இன்னு ஏன்டா அத
வாயில வச்சுட்டு
இருக்க


பஞ்சையாவது
மிச்சம்
வச்சானே

புதன், 6 அக்டோபர், 2010

தபூ சங்கர் கவிதைகள்

நான் வழிபட இந்த
உலகத்தில்
எத்தனையோ கடவுள்
இருக்கின்றது
ஆனால் நான்
காதலிக்க இந்த
உலகத்தில் நீ மட்டும்
தான் இருக்கிறாய்

சிந்தும் மழை மீண்டும்
மேகத்துக்குள் போவது
இல்லை ஆனால்
நீ சிந்தும் வெட்கம்
மெல்லாம் மீண்டும்
உன்
கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறது

என் சின்ன இதயத்தில்
உன்னை எப்படி குடி
வைக்கப் போகிறேன் என்றிருந்தேன்
நீ உள்ளே நுழைந்ததும்
என் இதயம்
பெரியதாகி விட்டது

நில உச்சவரம்பு
சட்டம் போல
அழகு உச்ச வரமபுச்
சட்டம் பேட்டுத்தான்
உன் அழகின்
கொட்டத்தை அடக்க
வேண்டும்

புதிய புடவை
எப்படி இருக்கு
என்றாய்
நல்லா இல்லனு
சொல்லு என்று
கெஞ்சியது நீ
களைந்து கொடியில்
போட்டிருந்த புடவை

நீ முகம் கழுவுகையில் ஒடிய
தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டு விட்டேன்
நான் ஒவ்வொரு
நாளும் இவ்வளவு
அழகையா வேண்டாம்
என்று நீ நீரில்
விடுகிறாய்

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்
இவன் உனக்காகப்
படைக்கப்பட்டவன்
இப்படிக்கு
இறைவன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 5 அக்டோபர், 2010

பா.விஜய் கவிதைகள்

புதிது புதிதாக எழுதச்
சொல்கிறார்கள்
உன் பழைய
ஞாபகங்களைத் தான்
கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற
கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே
அற்புதமான
அன்பளிப்பு இந்த
வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா

இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்
நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன்
வானியல்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வெள்ளி, 1 அக்டோபர், 2010

பா.விஜய் கவிதைகள்

தீயின் திறப்புவிழா
உன் புன்னகை

நீ
வாசத்தை உற்பத்தி
செய்யும் நாணத்
தொழாற்சாலை

குனிந்து நகரும்
கோபுரம்

நிமிர்ந்த நிலவே
கண்ணுக்குத்
தெரியாத பூக்கள்
உனக்கு வாசமானது
கண்ணுக்கு தெரியும்
கனிகள் உனக்கு
வசீகரமானது

மலராயுதம் நீ

நீ முகத்தை துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டியிருந்தது
சில வானவில்கள்

அருவிகளை என்
கண்களுக்கு தந்து
விட்டு எங்கே நீ
குளிக்க சென்று
விட்டாய்
(தொடரும்)
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

இந்த மார்புக்
கச்சையை கண்டு
பிடித்த மாமனிதன்
ஆணாகவே இருக்க
வேண்டும்
ஏனென்றால்
அலைகளைக் கட்டிப்
போடும் அவசியம்
கடலுக்குத் தெரியாது

நீ போனபிறகும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது அந்த
இடத்தில் உன்
கொலுசு சத்தம்

உறக்கத்தை தேடி
கடிதம் போட்டேன்
ஆள் இல்லே என்று
செய்தி வந்தது

பூட்டிப் பூட்டி
வைத்தாலும்
தொலைந்துதான்
போகும் காற்றும்
காதலும்

உலகில் பொய்கலை
எல்லாம் ஒன்றாக
சேர்த்த போது ஒரு
பெண்ணின் புன்னகை
கிடைத்தது
ஏமாற்றங்களை
எல்லாம் ஒன்றாய்
சேர்த்த போது ஒரு
ஆணின் கண்ணீர்
கிடைத்தது

சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறது
காற்றும் என் காதலும்

மண்ணைப்
பிசைந்தால் பாண்டம்
மனசைப் பிசைந்தால்
காதல்

மூச்சு முட்ட கவிதை
தின்றுவிட்டு
படுத்துப் புரண்டு
கொண்டிருக்கும்
பல்கலைக்கழகம் நீ

(தொடரும்)

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

சில்மிசியே கவிதை
தொகுப்பில் இருந்து
தொகுக்கப்பட்டவை

நெருப்பிற்கு ருசி
உண்டு உன்
இதழ்களைக் கொடு
ருசிக்கிறேன்

ஃ கடல் உன்மார்பு
அதனால்தான்
கரையோரம்
தளும்புகிறது

ஃ லட்சக்கணக்கான
வீரர்களுக்கு முன்
ஒருவனாய்
உனக்கு முன் நான்

ஃஉன் ஆனவத்தை
விட அழகானது
உன்னிடம் எதுவும்
இல்லை

ஃ ஒர் அரங்கமே
கை தட்டியது போல்
இருந்து நீ இமைகளை தட்டியதும்

ஃ நீயும் நானும்
சேர்ந்தால் அது இயல்
இசை நாடகம் அல்ல
இதழ் இசை நாடகம்

ஃ இலக்கணம் மீராத
உன் இளமைக்கனம்
வாழ்க

ஃ காற்றும் காதலும்
சன்னல் வழி
வருகிறது கதவுவழி
சென்றுவிடுகிறது

ஃ இளமைப் படகே
உன்னால் கவிழ்ந்த
நதி நான்

ஃ முடிந்தால் வந்து
பார்த்து விட்டுப் போ
இறந்து கிடக்கும்
என் அமைதியை

ஃ கிளைகளை மூடும்
அவசரத்தில் கனிகளை
இலேசாய்
தெரியவிட்ட அப்பாவி
மரம் நீ

ஃ முன்
அறிவிப்பில்லாத
யுத்தங்களை உன்
முந்தானைகள்
செய்கின்றன

ஃ நீ உலக அதிசயம்
அல்ல உலக ரகசியம்

ஃ நீ பல்கலைக் கழகம்
அல்ல
கள்கலைக்கழகம்

ஃ காய்சல் அடிக்கிறது
ஒரு டீஷ்பூன் வெட்கம்
தா

ஃ உற்பத்தியான இடத்திற்கே திரும்பத்
திரும்ப வரும் நதி
காதல்தான்

ஃ உன் நெற்றியில்
முத்தங்களை
பயிரிட்டேன்
கண்ணங்கள்
வெட்கத்தை
அறுவடை
செய்கின்றன

ஃ மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழவகைகள்
உன்னிடம் மட்டுமே
உண்டு

ஃ எப்படியாவது இன்று
இரவு கண்டுபிடித்து
விட வேண்டும்
வெட்கம் உன்
உடம்பில்
ஆரம்பிக்கும் இடத்தை

ஃ இலேசான
இதயங்களில் தான்
கனமான காதல்
தோன்றுகிறது

ஃ நீ மேற்கின்
சிவப்பில் கிடைத்த
சிவப்பு

ஃ தராசுத் தட்டில் என்
ஆயிரம் இரவுக்
கண்ணீரை
வைத்தேன் நீ மறு
தட்டில் ஒரே ஒரு
புன்னகையை
வைத்தாய் சமம்

ஃ சொர்கத்தை ரசிக்கும்
திருட்டு வழி
உன் படுக்கை அறை
ஜன்னல்

ஃ நஞ்சும் காதலும்
தலைக்கு
ஏறிவிட்டால்
இறங்காது

ஃ நீ எனக்கு குளிர்கால
கூட்டத் தொடர்

ஃ ஒரு பெண்ணின்
இடையின் சுற்றளவும்
ஆனின் கைநீளமும்
ஒன்று

ஃ ஆள் கொல்லி
மிருகங்கள் காட்டில்
திரிகின்றன
உயிர் கொல்லி
மிருகங்கள்
தாவணியில்
திரிகின்றன

ஃஇரட்டை ஜடை
துப்பாக்கியே உன்
தோட்டாக்கள் என்ன
மல்லிகை
மொட்டுகளா

ஃ உடம்பை மறைக்க
உடை கண்டு
பிடித்தவனை விட
எதை எதை
மறைக்க வேண்டும்
என்று கண்டவனே
ரசனாவாதி
(தொடரும்)

காதல் கவிதைகள்

இந்த இரவையே
உனக்கு கடிதமாக
அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா
-பழநிபாரதி

பகலெல்லாம் உன்னை
ஒளிப்பதிவு
செய்கிறது சூரியன்.
இரவில் ...
ஒளிபரப்புகிறது
நிலவாக
-கட்டளை ஜெயா

முத்தத்தைப் பருகி
மட்டுமே உயிர்வாழ
முடியுமா என்ன
காதலில் முடியும்

தேவதைக்கும்
இராட்சசிக்கும்
ஒற்றுமைகள்
உண்டென்று
கூறினால்
காதலிக்காதவர்கள்
நம்பமாட்டார்கள்
-விஜய் மில்டன்

சனி, 25 செப்டம்பர், 2010

நா.முத்துக்குமார் கவிதைகள்

பதின்வயதில் முதல்முறை ஓர்
பேய் பிடித்து ஆட்டுவது

நதிநீரில்
வலைவிரித்து
விண்மீன்கள்
மாட்டிவது

ரதி என்றும் ரம்பை
என்றும் ராப்பகலாய்
புலம்புவது

அதிகாலை அலாரம்
வைத்து விழித்திருந்து
நிறுத்துவது

மதில்சுவர்
நண்பர்களை
மறைந்திருந்து
கழட்டுவது

குதிரினிலே நெல்லை
போல் வார்த்தைகளை
நிரப்புவது
எதிரினிலே பார்த்து
விட்டால் வழக்கம்
போல் சொதப்புவது

பதில் தெரியா
கேள்வியுடன் பல
கடிதம் நீட்டுவது

முதிர்கண்ணன் ஆன பின்பும் முதல்
தழும்பை போற்றுவது
ஃஃஃஃ அதுதாம்பா ஃஃஃ ஃஃஃஃஃ காதல் ஃஃஃஃஃஃ
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 16 செப்டம்பர், 2010

புதன், 15 செப்டம்பர், 2010

தீட்டத்தீட்ட

தீட்டத்தீட்ட
விலை ஏறுவது
வைரம் மட்டுமல்ல
அங்காடி அரிசியும்
தான்

( கல்லச்கந்தையில் தீட்டப் பட்ட அங்காடி
அரிசி கிலோ
15ரூபாய் )

வியாழன், 2 செப்டம்பர், 2010

தெளிந்த நல்நீரும் காற்றும்

நாகரீகச் சேறு வழுக்கி
நவீனப் பள்ளத்தாக்கில்
விழுந்து மரணத்தோடு
போராடும் மனிதனுக்கு
அவசரத்தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

கூவ நீருக்கும்
குழாய் நீருக்கும்
தற்சமயம் நிறபேதம்
மட்டும் தான்
இனி குடிமட்டுமல்ல
குடிநீரும் குடியைக்
கெடுக்கும்

கந்தகமும்
கரியமிலமும் காற்றோடு
கலப்புமணம்
புரிந்ததால்
சுத்தக்காற்று
வார்த்தையில் மட்டும்

இனி காச நோயினும்
காற்று நோய்
கொடியது

நிக்கோடினால்
தேய்பிறையான
நுரையீரலுக்ககும்
ஒளிச்சேர்க்கைக்கும்
கூட திறனிழந்த
இளந்தளிர்களுக்கும்
அவசியத் தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

எழுதியது .
பள்ளித்தேழன்
கு.கண்ணன்
( தீயனைப்புத்துறை
காவலர் )

கவிஞர் வாலி கவிதைகள்

மலைகள் மண்
மாதாவின் மார்பகங்கள் ...

இவ்வளவு பெரியதா ?
என்று ஆச்சிரியப்பட
வேண்டாம்

எவ்வளவு
மேகக் குழந்தைகள்
அத்தனைக்கும்
பாலுட்ட வேண்டாமா ?

புதன், 25 ஆகஸ்ட், 2010

தனிமை தீவில் ...

யார் அவள் வந்தாள்
இதயத்தில்
நுழைந்தாள்
மறுசென்மம் தான்
கொடுத்தாள்

கரம் ஒன்று
கொடுத்தாள்
கவிதையாய்
நிலைத்தாள் என்
கனவினை ஏன்
பறித்தாள்

உறக்கங்கள்
இல்லாமல் உனைக்
கண்கள் தேடுதே
உடலோடு உயிர் சேர
ஒப்பந்தம் போடுதே

தொடுவானம்
நீள்கிறதே மழைமேகம்
சூழ்கிறதே உன்னை
நான் காண்கையிலே

காதலே நில்லடி என் கவிதைகள் உன்காலடி
அதன் வார்த்தையாய்
வாழ்வதும் நீயே நீயே

தொடுவானிலே உள்ள
மேகமும் தொலை
துரமே செல்லும்
போதிலும் ஒரு
தாகமாய் கடலேயே
தேடும் தேடும்

உச்சி வெயிலின்
ஒளியில் கூட நிழலும்
இங்கே நீளுதடி
என்னை நீயும்
பிரியும்வேலை
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இளைய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி சாகுதே

யார் அவள் வந்தாள்
... ... ...


உன்னையே
பார்க்கிறேன்
உரிமையாய்
கேட்கிறேன் என்
வாழ்க்கையின்
கவிதையாய் நீயே
வேண்டும் வேண்டும்

மரணமே நேரினும்
உன் மடியையே
கண் தேடிடும்
என் காதலை உன்
கண்கள் மறுத்தால்
என் கல்லரை
பூ பூத்திடும்

கண்களைத் திறந்தும்
கனவுகள் வந்தாள்
கவிஞனின் தாகம்
தீராது
இரவுகள் வந்தும்
இமைகள மறுக்க
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இனிய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி வாடுதே ...

புதன், 18 ஆகஸ்ட், 2010

முத்தம் திண்ணும் மோகினி ...

அன்றொரு நாள் நீ
ஒரு போட்டி வைத்தாய் ...

" சத்தம் இல்லாமல்
பத்து முத்தம் பதமாக
தரவேண்டும் .
முத்தமிடும் போது
சத்தம் வந்து விட்டால்
தண்டனையாக
தோற்றவர்
வென்றவர்க்கு நுறு
முத்தங்கள் தர
வேண்டும் " என்ன
சரியா என்றாய்


கரும்பு திண்ணக் கூலியா ம் ம் ம் என்று
தலையாட்டினேன்

முதலில் நீ என்றாய்
சரி என்று முதல்
முத்தம் நெற்றி
இரண்டாவது இடக்கண், வலக்கண்
மூன்று , நான்கு நாசி
ஐந்து வலக்கண்ணம்
ஆறு இடக்கண்ணம்
ஏழு காது மடல்
எட்டு கூந்தல்
ஒன்பது கவிதை
என்று பத்தாவது
முத்தத்தை பதமாக
இறக்க இதழிடம்
வந்தேன் ...


வந்து இதழோடு
இதழ் பதிக்க
ச்... ...

ஐயய்யொ சத்தம்
வந்திடுச்சு என்று
கையை உதரிக்
கொண்டு சிரித்தாய்

என்னால் சத்தம் வர
வில்லை இல்லை
என்றேன்

அதெல்லாம் எனக்கு
தெரியாது பந்தயப்படி
நூற குடுத்துட்டுப் போ

சரி என்று
நூறு கொடுத்து விட்டு
இளைப்பாறலாம்
என்று நினைக்க

எங்க போற
நூறு எங்க என்றாய்

இப்ப தான்டி
கொடுத்தேன்

அது நீ தோத்ததுக்கு
இப்ப கோட்பது
நான் வெற்றி
பெற்றதர்க்கு

அன்று முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது


என்னடி நூறு நூறா
நொருக்குர
எனக்கு தான்
நொருக்கு தீணீணா
ரொம்ப பிடிக்கும்னு
உனக்கே தெரியுமே
என்றாய் ... ...

இத முதல்ல பாருங்க ...


எனக்குள்ள ஒரு மிருகம்
இருக்கேன்ள பாத்தீங்களா


என்ன ...
சுகமா இருக்குயா


புலி வருது
புலி வருது ...


இந்த சூனாபானா
எவ்வளவு சூட்டிப்புனு
இப்ப தெரியுதா


ஐ லவ்யூடா
செல்லம்


எங்க எல்லோரும்
ஒரு முற பல்ல
காட்டுங்க


ஒரே .!
கே...ரா இருக்குப்பா


என்ன பன்றது
பயபுள்ள ஒன்னும்
மடிய மாட்டீங்குது


இவங்க இப்படித்தா
நீங்க வாங்க வேற
என்ன வச்சிருக்கான்னு
பாக்கலாம் .