செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

இந்த மார்புக்
கச்சையை கண்டு
பிடித்த மாமனிதன்
ஆணாகவே இருக்க
வேண்டும்
ஏனென்றால்
அலைகளைக் கட்டிப்
போடும் அவசியம்
கடலுக்குத் தெரியாது

நீ போனபிறகும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது அந்த
இடத்தில் உன்
கொலுசு சத்தம்

உறக்கத்தை தேடி
கடிதம் போட்டேன்
ஆள் இல்லே என்று
செய்தி வந்தது

பூட்டிப் பூட்டி
வைத்தாலும்
தொலைந்துதான்
போகும் காற்றும்
காதலும்

உலகில் பொய்கலை
எல்லாம் ஒன்றாக
சேர்த்த போது ஒரு
பெண்ணின் புன்னகை
கிடைத்தது
ஏமாற்றங்களை
எல்லாம் ஒன்றாய்
சேர்த்த போது ஒரு
ஆணின் கண்ணீர்
கிடைத்தது

சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறது
காற்றும் என் காதலும்

மண்ணைப்
பிசைந்தால் பாண்டம்
மனசைப் பிசைந்தால்
காதல்

மூச்சு முட்ட கவிதை
தின்றுவிட்டு
படுத்துப் புரண்டு
கொண்டிருக்கும்
பல்கலைக்கழகம் நீ

(தொடரும்)

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

1 கருத்து:

  1. //மூச்சு முட்ட கவிதை
    தின்றுவிட்டு
    படுத்துப் புரண்டு
    கொண்டிருக்கும்
    பல்கலைக்கழகம் நீ//
    super,

    பதிலளிநீக்கு