வியாழன், 15 செப்டம்பர், 2011

இரண்டு கருப்பைகள் இருந்த அதிசயப் பெண்

மருத்துவ உலகில் ஒரு அதிசயம் ?
பீகாரில் ஒரு பெண்
இரண்டு கருப்பைகளில்
தனித்தனியாக ஜனித்த
2 ஆண்
குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பொதுவாக
பெண்களுக்கு ஒரு கருப்பை தான்
இருக்கும். 50 மில்லியன் பெண்களில்
யாராவது ஒருவருக்கு 2 கருப்பைகள்
இருக்கும்.
பீகார் தலைநகர் பாட்னாவின் வட
பகுதியிலுள்ள மதுராபூர்
சாகியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்
ரிங்கு தேவி (28). அவரது கணவர்
ராணுவ புலனாய்வு அதிகாரி.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த
அவரை முசாபர்பூரில் உள்ள
மாத்தி சதான் பாரிஜாத் நர்சிங் ஹோமில்
பிரசவத்திற்காக சேர்த்தனர். கடந்த
வெள்ளிக்கிழமை அவருக்கு சிசேரியன்
முறையில் 2 ஆண் குழந்தைகள்
பிறந்தன.
2 குழந்தைகள் பெற்றெடுத்ததில்
ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால்
அந்த குழந்தைகள் 2 கருப்பைகளில்
ஜனித்துள்ளது. இது மருத்துவ உலகில்
ஒரு அதிசயமாகும்.
இரண்டு கருப்பைகளில்
உருவாகி பிறக்கும் குழந்தைகள் மிகக்
குறைந்த எடையுடன்,
குறைமாதத்தில் பிறக்கும்
வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும்
இத்தகைய பிரசவத்தில்
குழந்தைகளுக்கோ,
தாய்க்கோ ஆபத்து ஏற்படலாம்.
ரிங்குவின் குழந்தைகள் இரண்டும் 1.5
கிலோ, 2 கிராம் எடையுடன்
பிறந்துள்ளன. சிசேரியன் முறையில்
பிறந்தாலும் தாயும், சேயும் நலமாக
உள்ளனர். ரிங்குவிற்கு கடந்த 4
ஆண்டுகளுக்கு முன்பு சுக
பிரசவத்தில்
ஒரு குழந்தை பிறந்துள்ளது.
எனக்கு இரட்டையர்கள்
பிறக்கப்போகிறார்கள் என்று தெரியும்.
ஆனால் பிரசவ வலியின்போது தான்
எனக்கு 2 கருப்பைகள்
இருப்பது தெரியும்
என்று ரிங்கு தெரிவித்தார

புதன், 14 செப்டம்பர், 2011

1929 ல் பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது பற்றி அப்போது ஆனந்த விகடன் எழுதிய கட்டுரை

பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத்
என்பவரும் திட்டமிட்டபடி, 1929
ஏப்ரல் மாதம் 8ம்
திகதியன்று சட்டசபையில்
குண்டுகளை வீசிவிட்டு, ‘இ;ன்குலாப்
ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டார்கள்.
இந்திய அரசியல் வரலாற்றில் இந்த
முழக்கம் அன்றுதான்
முதல்முறையாகக கேட்டது. பின்னர்
கையிலிருந்த துப்பாக்கியால்
மேல்நோக்கிச் சுட்டுவிட்டு,
ர்.ளு.சு.யு யின்
துண்டறிக்கைகளை வீசி எறிந்தார்கள்.
பிறகு தாங்களாகவே முன்வந்து கைதாகினார்கள்.
இன்று பகத்சிங்கைப்
புகழ்ந்து எழுதுகின்ற ஆனந்தவிகடன்
பத்திரிகை அன்று பகத்சிங்கின் இந்த
நடவடிக்கை குறித்து என்ன
எழுதியது தெரியுமா? நேயர்களே,
1929ம் ஆண்டு (அப்போது மாத
இதழாக வெளிவந்த ஆனந்தவிகடனின்)
மே மாத இதழில், பகத்சிங்கின்
செய்கையைக் கண்டித்தும்,
கேலி செய்தும் வெளியான
அக்கட்டுரையின்
ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
“இரண்டு இளைஞர்கள் திடீரென
எழுந்து இரண்டு அசல்
வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு,
கைத்துப்பாக்கிகளால்
ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம்.
இந்த இளைஞர்கள் இருவருக்கும்
முழுமூடச்சிகாமணிகள்’ என்ற
பட்டத்தை விகடன் அளிக்க
விரும்புகின்றான். முதலாவதாக,
மகாத்மாவின் சத்தியாக்கிரகப்
பீரங்கியினால் தகர்க்க முடியாத
அதிகாரவர்க்கத்தை வெங்காய
வெடியினாலும், ஓட்டைத்
துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள்
எண்ணியது மூடத்தனம். . . இந்திய
குடியரசின் சேனாதிபதி என்பதாகக்
கையொப்பமிட்டு, சிரிப்பதற்கு விடயம்
தந்ததின் பொருட்டு விகடன் மிகவும்
நன்றி செலுத்துகின்றான்.
(ஆனந்தவிகடன்-1929 மே இதழ்)
ஆனால் பகத்சிங் அவர்களும்
பட்டுகேஸ்வர் தத் அவர்களும் கொடுத்த
வாக்குமூலத்தைக் கேளுங்கள்
நேயர்களே!
“நாங்கள் வெடிகுண்டு எறிந்தோம்.
எந்தத் தனிநபரையும் நோக்கி நாங்கள்
வெடிகுண்டு போடவில்லை.
சட்டசபை பயனற்றது என்று கருதி அதன்மீது போட்டோம்.
சட்டசபை இருந்து என்ன பயன்?
மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகள்
அசட்டை செய்யப்படுகின்றன.
சட்டசபையினால் யாதொரு நன்மையும்
கிடையாது. ஏழைமக்கள் படும்துயர்
சொல்லி முடியாது. இங்கிலாந்தைக்
கனவிலிருந்து தட்டி எழுப்ப
வேண்டுமென்றால்
வெடிகுண்டு போடவேண்டியதுதான்!. . .
கொலை செய்யவேண்டும்
என்று எண்ணியிருந்தால்
அவ்விதமே செய்திருப்போம். அநீதியாக
உள்ள தற்கால சமூகவாழ்வையும்,
அரசியலையும்
போக்குவதே புரட்சியாகும்…. . .
ஒரு மனிதனின் நலத்தை, மற்றொருவன்
பறிப்பதும் ஒரு தேசத்தின்
நலத்தை மற்றொரு தேசம் பறிப்பதும்
ஒழிய வேண்டும்.. . . நாங்கள்
எச்சரிக்கை செய்துள்ளோம். இந்த
எச்சரிக்கை மதிக்கப்படாமல் போனால்,
தேசத்தில் பெரிய புரட்சி தோன்றும்.
அக்காலத்தை, நாம் எதிர்பார்க்கின்றோம்.
புரட்சி என்ற பலிபீடத்தில்
எங்களது இளமையை நாங்கள்
அர்;ப்பணிக்கின்றோம். எத்தகைய கஷ்ட
நஷ்டம் நேரினும் சரி,
அதனை அனுபவிக்க நாங்கள் தயார்.
‘புரட்சி ஓங்குக! புரட்சி ஓங்குக!’
எவ்வளவு தெளிவாக, தீர்க்கமான,
வீரமான வாக்குமூலம்! இந்த
வீரமிகு செயலைத்தான்
ஆனந்தவிகடன் பத்திரிகை கிண்டல்
செய்து எழுதியது.

நன்றி
tamilnation.org
இந்த கட்டுரையின் ஆசிரியர்
சன்முகம் சபேசன்

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்

ஏ இந்தியாவே...!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம்
உண்டு என்னிடம்....
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப்
பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம்
அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய்
விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின்
ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப்
போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப்
பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை
ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம்
கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம்
தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல்
எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய
அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம்
பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக்
கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள்
ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக
எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம்
பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில்
அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம்
செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல்
பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற
சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து
கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம்
நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல்
போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல்
கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல்
போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப்
போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்!
நிரந்தரமாகப் போகட்டும்!
-கவிஞர் தாமரை
..........
பின்குறிப்பு:
உங்கள்
குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன்
குழந்தைகள் சிரிக்கட்டும்!

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இரத்தம் குடிக்கும் மனிதர்கள்

நவீன உலகத்தில்
ஆடு மாடுகளை விட
அதிகம் அடிமைப்
படுத்தப்படுவது
தொழிலாளர்கள் தான்
நொடிக்கு நொடி
ஒவ்வொரு தொழிலாளியின்
இரத்தமும் வியர்வையும்
உறிஞ்சப்படுகிறது
அதைப்பற்றிய கவிதை
இதோ

வேலை தர
முதன் முதலில்
முதலாளி கோரியது
என் சிறகுகளில்
இருந்து சில
இறகுகளை

வேலைக்கு சேர்ந்த
சில நாட்களில்
என்னைப் பாராட்டி
இரண்டு இறகுகளை
வாங்கிக் கொண்டார்

சில மாதங்களுக்குப்
பிறகு சில சூழ்நிலை
களை முன் வைத்து
மூன்று இறகுகளை
பெற்றுக் கொண்டார்

பின்னொரு நாள்
வேலையை
தக்கவைத்துக் கொள்ள
வேண்டுமாயின்
சில இறகுகள்
வேண்டுமென்று
மறைமுகமாய் மிரட்டி
பிடுங்கிக் கொண்டார்

சிறகுகளற்ற நான்
உயரத்தில் பறக்கும்
முதலாலியைப்
பார்க்கிறேன்
என் இறகொன்றால்
தன் காது குடைந்தபடி
அவர்
இறகேதும்
முளைத்துள்ளதா
எனக் குனிந்து
என்னைப் பார்க்கிறார்
-ஆனந்த விகடன்

சனி, 22 ஜனவரி, 2011

மரச்சிற்பங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com