மோகினிக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோகினிக் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஆகஸ்ட், 2010

முத்தம் திண்ணும் மோகினி ...

அன்றொரு நாள் நீ
ஒரு போட்டி வைத்தாய் ...

" சத்தம் இல்லாமல்
பத்து முத்தம் பதமாக
தரவேண்டும் .
முத்தமிடும் போது
சத்தம் வந்து விட்டால்
தண்டனையாக
தோற்றவர்
வென்றவர்க்கு நுறு
முத்தங்கள் தர
வேண்டும் " என்ன
சரியா என்றாய்


கரும்பு திண்ணக் கூலியா ம் ம் ம் என்று
தலையாட்டினேன்

முதலில் நீ என்றாய்
சரி என்று முதல்
முத்தம் நெற்றி
இரண்டாவது இடக்கண், வலக்கண்
மூன்று , நான்கு நாசி
ஐந்து வலக்கண்ணம்
ஆறு இடக்கண்ணம்
ஏழு காது மடல்
எட்டு கூந்தல்
ஒன்பது கவிதை
என்று பத்தாவது
முத்தத்தை பதமாக
இறக்க இதழிடம்
வந்தேன் ...


வந்து இதழோடு
இதழ் பதிக்க
ச்... ...

ஐயய்யொ சத்தம்
வந்திடுச்சு என்று
கையை உதரிக்
கொண்டு சிரித்தாய்

என்னால் சத்தம் வர
வில்லை இல்லை
என்றேன்

அதெல்லாம் எனக்கு
தெரியாது பந்தயப்படி
நூற குடுத்துட்டுப் போ

சரி என்று
நூறு கொடுத்து விட்டு
இளைப்பாறலாம்
என்று நினைக்க

எங்க போற
நூறு எங்க என்றாய்

இப்ப தான்டி
கொடுத்தேன்

அது நீ தோத்ததுக்கு
இப்ப கோட்பது
நான் வெற்றி
பெற்றதர்க்கு

அன்று முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது


என்னடி நூறு நூறா
நொருக்குர
எனக்கு தான்
நொருக்கு தீணீணா
ரொம்ப பிடிக்கும்னு
உனக்கே தெரியுமே
என்றாய் ... ...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

வம்புத்தேன் ...

நண்பர்களுடன்
நாம் இருக்கும் போது
" என்னடா உன்உதடு
வர வர ...
சிவப்பாயிட்டே போகுது " என்று ஒரு
நண்பன் கேட்டுவிட்டான்
அவனை சமாளிக்க

தேன் குடித்தால்
இப்படித்தான் ஆகும்
என்றேன்
தேன் குடித்தாலா ... ?
( அவன் விடுவதாக
இல்லை )

வம்புத்தேன் குடித்தால்
இப்படித்தான் ஆகும்
என்றேன்
வம்புத்தேனா ... ?

எல்லோரும் குழம்பிப்
போய் போதுமடாசாமி என்று தலையில் கை
வைத்துக்
கொண்டார்கள்

நீ மட்டும் ...
வெட்கத்தில் நெஞ்சில்
கை வைத்துக்
கொண்டாய் .

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வெள்ளி, 23 ஜூலை, 2010

உதட்டுக்கு ஆகாது ...

( முத்தம் திண்ணும் மோகினிக்
கவிதைகளின் தொடர்ச்சி )

நமது காவிரிக் கரைப்
பூங்கா சந்திப்பில்
முதல் முறையாக
உன் இதழ் வாசித்தேன்

நீயோ ...
கண்கள் வியர்த்து
விட்டாய்

ஏனடி கண்களில் நீர்
வைக்கிறாய்
நான் தவறு செய்து
விட்டேனா ?

* இல்ல

உனக்கு விருப்பம்
இல்லையா ?

* அது இல்ல

உதடு கடித்து
விட்டேனா ?

* அதுவும் இல்ல

பிறகு இந்த நீர் ஏனடி?


நீ ... கண்களைத்
துடைத்துக் கொண்டு
சொன்னாய்

போடா !
ஒற்றை முத்தம்
உதட்டுக்கு ஆகாது
என்பார்கள் !...
அதை நினைத்துத்
தான் ...

( உங்கள்
கருத்துக்களை
கருத்துரையில் பதிவு செய்யுங்கள் )

ஒரு இனிப்பான காரம் ...

(முத்தம் திணணும்
மோகினி
கவிதைகளின்
தொடர்ச்சி )



நீ...
மொத்தமா கேட்பதை
முத்தமா கேட்கிறாய்
முத்தமா கேட்பதையும்
சத்தமா கேட்கிறாய்

* சரி ... சரி சத்தம்
இல்லாம காதோரம் கேட்கிறேன் காலைக் கடனை கடன் சொல்லாமல்
கட்சிதமா தீர்த்திடு

கணக்குக்கும் எனக்கும்
எப்பவுமே ஆவாது
ஒன்னும் ஒன்னும்
சேர்த்து மூனா தரவா ?

* ஐயய்யோ தப்புடா
ஒன்னும் ஒன்னும்
சேர்த்தா பதினொன்னு
பாரடா

இது எந்த ஊர் கணக்கு
* எங்க ஊர் கணக்கு

பதிக்கவா ஒன்னுதான்
* ம்ம்ம்
பதினொன்னு தா

போடி நீயும் உன்
கணக்கும்
*ஏதோ கொடுத்து
கொடுத்து சிவந்து
போன கௌவ்வை
இதழ் கோப்பெருஞ்
சோழன்னு பீத்திக்குற
இனிப்பு ஒன்னு
கேட்டா இல்லீங்கற


நீ கேட்ட இனிப்பு
இப்போதைக்கு இருப்பு
இல்ல ... சுடச்சுட
காரம் இருக்கு
வேணுமா ?

*காரமா ? புதுசா இருக்கே
புதுசு தான்
உனக்காகவே சுடச்சுட
என் உதட்டால
செஞ்சது வேணுமா ?

* அது இது ன்னு
சொல்லி சின்னப்
பொண்ண
ஏமாத்தாதடா ?
வித்யாசம் என்னடா ?


இனிப்பு சாப்டா இரண்டு நாள்ள
திகட்டிடும் முப்பது,
அறுபது
கணக்குக்குள்ள
முடிஞ்சிடும் ஆனா
காரம் சாப்பிட்டா ...
*சாப்பிட்டா ?

காது அடைக்கும்
கண்ணு கலங்கும்
இதழ் இளஞ்சூட்டில்
கொதிக்கும்
உசுருக்குள் அனல்
ரொம்ப அடிக்கும்

இப்ப சொல்லு என்ன
வேணும் ?
இனிப்பா ? காரமா ?


* அப்பப்ப ...
இனிப்பு கொடு
அதிகமா காரம் கொடு

சரியா ?

ம்ம்ம் ... ம்ம்ம் ...
ம்ம்ம் ...


ஐயய்யோ
யாராவது
இருக்கீங்களா ?

* யாரும்
பார்க்கலையே ...
... ..

(உங்கள்
முத்தம் திண்ணும்
மோகினி இதேபோல்
உங்கள்
இதழ் கடித்து காரம்
சாப்பிட்டிருந்தால்
கருத்துரையில்
பதிவு செய்யுங்கள் )

புதன், 21 ஜூலை, 2010

முத்தம் திண்ணும் மோகினி


* உனக்கு கொடுத்த காதல் புத்தகத்தை
படித்து விட்டாயா ?
எப்படி இருக்கிறது ?
என்று கேட்டேன்

நீயோ ...
இரவல் கவிதைகளை
நான் எப்படி ரசிக்க
முடியும் என்று கேட்டாய்

இதோ உனக்காக
உனக்காக மட்டும்
எழுதுகிறேன்


* வாழ்க்கை
ஒரு தவம்

காதல் ... ?
அது
தவத்தில் தவம் !


*காதல் ...
வரங்கள் கொடுக்கும்
தேவதை - அதுவும்
வாரிக்கொடுக்கும்
தேவதை

அப்படியானால்
நான் ? என்கிறாயா

நீ ...
அந்த காதலையே
வரமாய்த் தந்த தேவதை


* நீ ...
தூரத்தில் பேரழகி

என்னைத் துரத்துவதில்
போர் அழகி !


* நான் உன்னை
அணுவிலும் அணுவாய்
காதலிக்க வேண்டும்

நான் அழுகின்ற
வரையில் காதலிக்க
வேண்டும்

காதல் அழிகின்ற
வரையில் காதலிக்க
வேண்டும்



* நீ என்னைக்
கேட்கிறாய் - அதுவும்
திண்ணக் கேட்கிறாய்

உன் கண்களிலே
குழலைச் சொருகி
என் உயிரைக்
குடிக்கப் பார்க்கிறாய்


*இந்த ...
காதல் தேவதையிடம்
விழிக்காத இரவு
உறங்காத உதயம்
இரண்டையும் நான்
கேட்கப்போவதில்லை

ஒன்று
ஒன்றெ ஒன்று மட்டும்
போதும் .,.
நீ என்னுடன்
இருக்கும் போது

* நான்
உன் தாவனிக்
கவிதைகளை படிக்கும்
போதெல்லாம் உனக்கு
எத்தனை ஆனந்தம்

எனக்காகவே மறைத்து
வைத்திருப்பது போல்
ஒழித்து ஒழித்து
காட்டுகிறாய்


நம் முதல் சந்திப்பில்
உனக்கு
தண்ணீர் தேசத்தை
( புத்தகம் ) மட்டும்
தான் பரிசளித்தேன்

நீயோ ...
உன்னையே
( புகைப்படம் )
தந்து விட்டாய்

சரிதான்
ஒரு தேசத்தையே
அடகு வைத்துத் தான்
உன்னே
பெற்றிருக்கிறேன்


இது கனாகானும்
காலம்
என்ன கனவு கண்டேன்
என்கிறாயா ?

தெரியவில்லை
ஆனால்
கனவு முழுவதும்
உன்னை மட்டுமே
கண்டேன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

சனி, 17 ஜூலை, 2010

முத்தம் திண்ணும் மோகினி

* ஒரு நாள்
பேசிக்கொண்டிருக்கும்
போதே திடீர் என்று
உன் இதழ் உடன்
இதழ் சேர்த்து உன்
உயிரை உறிஞ்சி
எடுப்பது போல்
முத்தமிட்டு விட்டேன்


* நீயோ ...
என் இதழ் பிரித்த
அடுத்த நொடியே
என்னே அரைந்து
விட்டாய் !

* ஒழுங்கா உனக்கு
முத்தம் கொடுக்க
தெரியாதா ?

* ம் ... இந்த முறை
ஒழுங்கா கொடு என்று
இதழ் காட்டி
மிரட்டினாய்

* உனக்கு முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது

அன்று தான் எனக்குத்
தெரிந்தது ... நீ
முத்தம் திண்ணும்
மோகினி என்று
... ... ... ...

* அமாவாசை இருளில்
பளீர் என்று தெரியும்
நட்சத்திரங்களைப்
போல ...

என் முகத்திலும்
தெரிகிறது ...
உன் இதழ் பதித்த
முத்தத் தடயங்கள்.


* உன்னுடன் நடக்கும்
களவிப்போரில்
உன் நக வாள்கள்
கிழித்து என் மார்பில்
வழிகிறது ...
செர்ரி நிறத்தில் தேன்

அட ... உனக்காக
உதிரம் சிந்துவதில்
தான் எத்தனை
ஆனந்தம் எனக்கு !

* தயவு செய்து
இரகசியம் சொல்கிறேன் என்று
என் காதருகே வராதே

உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் பட்டாலே
நான் மோட்சம்
அடைந்து விடுகிறேன்


* நீ என்னதான்
சேலை கொண்டு
மறைத்தாலும் உன்

நந்தவன மொட்டுக்களை காற்று
எனக்கு காட்டி
கொடுத்து விடுகிறது


* இனியும் உன்
ஏவுகனைத்
தாக்குதலுக்கு என்
இதயம் தாங்காது

என்ன விழிக்கிறாய் ?
உன் வெட்கத்தைத்
தான் சொல்கிறேன்


--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

ஞாயிறு, 13 ஜூன், 2010

முத்தம் திண்ணும் மோகினி

காதல் ஒரு புதையல்
இதை தோண்டும் போது
சிலருக்கு...கற்சிலை கிடைக்கும்
சிலருக்கு கண்ணீர் கிடைக்கும் சிலருக்கு கவிதை கிடைக்கும்
எனக்கு கிடைத்த புதையல் மோகினி நீ
அதுவும் சாதாரண மோகினி அல்ல
முத்தம் திணணும் மோகினி