புதன், 25 ஆகஸ்ட், 2010

தனிமை தீவில் ...

யார் அவள் வந்தாள்
இதயத்தில்
நுழைந்தாள்
மறுசென்மம் தான்
கொடுத்தாள்

கரம் ஒன்று
கொடுத்தாள்
கவிதையாய்
நிலைத்தாள் என்
கனவினை ஏன்
பறித்தாள்

உறக்கங்கள்
இல்லாமல் உனைக்
கண்கள் தேடுதே
உடலோடு உயிர் சேர
ஒப்பந்தம் போடுதே

தொடுவானம்
நீள்கிறதே மழைமேகம்
சூழ்கிறதே உன்னை
நான் காண்கையிலே

காதலே நில்லடி என் கவிதைகள் உன்காலடி
அதன் வார்த்தையாய்
வாழ்வதும் நீயே நீயே

தொடுவானிலே உள்ள
மேகமும் தொலை
துரமே செல்லும்
போதிலும் ஒரு
தாகமாய் கடலேயே
தேடும் தேடும்

உச்சி வெயிலின்
ஒளியில் கூட நிழலும்
இங்கே நீளுதடி
என்னை நீயும்
பிரியும்வேலை
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இளைய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி சாகுதே

யார் அவள் வந்தாள்
... ... ...


உன்னையே
பார்க்கிறேன்
உரிமையாய்
கேட்கிறேன் என்
வாழ்க்கையின்
கவிதையாய் நீயே
வேண்டும் வேண்டும்

மரணமே நேரினும்
உன் மடியையே
கண் தேடிடும்
என் காதலை உன்
கண்கள் மறுத்தால்
என் கல்லரை
பூ பூத்திடும்

கண்களைத் திறந்தும்
கனவுகள் வந்தாள்
கவிஞனின் தாகம்
தீராது
இரவுகள் வந்தும்
இமைகள மறுக்க
நொடி நீளுதே
உயிர் வாடுதே
உனைத் தேடுதே
ஒரு இனிய இதயம்
தனிமைத் தீவில்
புலம்பி வாடுதே ...

புதன், 18 ஆகஸ்ட், 2010

முத்தம் திண்ணும் மோகினி ...

அன்றொரு நாள் நீ
ஒரு போட்டி வைத்தாய் ...

" சத்தம் இல்லாமல்
பத்து முத்தம் பதமாக
தரவேண்டும் .
முத்தமிடும் போது
சத்தம் வந்து விட்டால்
தண்டனையாக
தோற்றவர்
வென்றவர்க்கு நுறு
முத்தங்கள் தர
வேண்டும் " என்ன
சரியா என்றாய்


கரும்பு திண்ணக் கூலியா ம் ம் ம் என்று
தலையாட்டினேன்

முதலில் நீ என்றாய்
சரி என்று முதல்
முத்தம் நெற்றி
இரண்டாவது இடக்கண், வலக்கண்
மூன்று , நான்கு நாசி
ஐந்து வலக்கண்ணம்
ஆறு இடக்கண்ணம்
ஏழு காது மடல்
எட்டு கூந்தல்
ஒன்பது கவிதை
என்று பத்தாவது
முத்தத்தை பதமாக
இறக்க இதழிடம்
வந்தேன் ...


வந்து இதழோடு
இதழ் பதிக்க
ச்... ...

ஐயய்யொ சத்தம்
வந்திடுச்சு என்று
கையை உதரிக்
கொண்டு சிரித்தாய்

என்னால் சத்தம் வர
வில்லை இல்லை
என்றேன்

அதெல்லாம் எனக்கு
தெரியாது பந்தயப்படி
நூற குடுத்துட்டுப் போ

சரி என்று
நூறு கொடுத்து விட்டு
இளைப்பாறலாம்
என்று நினைக்க

எங்க போற
நூறு எங்க என்றாய்

இப்ப தான்டி
கொடுத்தேன்

அது நீ தோத்ததுக்கு
இப்ப கோட்பது
நான் வெற்றி
பெற்றதர்க்கு

அன்று முத்தம்
கொடுத்தே எனக்கு
மூச்சுத் தினறிப்
போனது


என்னடி நூறு நூறா
நொருக்குர
எனக்கு தான்
நொருக்கு தீணீணா
ரொம்ப பிடிக்கும்னு
உனக்கே தெரியுமே
என்றாய் ... ...

இத முதல்ல பாருங்க ...


எனக்குள்ள ஒரு மிருகம்
இருக்கேன்ள பாத்தீங்களா


என்ன ...
சுகமா இருக்குயா


புலி வருது
புலி வருது ...


இந்த சூனாபானா
எவ்வளவு சூட்டிப்புனு
இப்ப தெரியுதா


ஐ லவ்யூடா
செல்லம்


எங்க எல்லோரும்
ஒரு முற பல்ல
காட்டுங்க


ஒரே .!
கே...ரா இருக்குப்பா


என்ன பன்றது
பயபுள்ள ஒன்னும்
மடிய மாட்டீங்குது


இவங்க இப்படித்தா
நீங்க வாங்க வேற
என்ன வச்சிருக்கான்னு
பாக்கலாம் .

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மறந்தேனே ...

உன்னை மட்டும்
நினைத்தேன்
உயிருக்குள்
விதைத்தேன் என்
நிழலையும் இன்று
தொலைத்தேன்

கண்கள் என்னை
விழுங்க கை
வளையல் குழுங்க
என் கனவினை
மென்று திண்று இன்று
செரித்தாய்

சூரியனும் இனிக்கும்
சந்திரனும் கொதிக்கும்
உன் முகத்தை பார்த்து
விட்டால் எனக்கோ
நெஞ்சுக்குள்ளே
தீப்பிடிக்கும்

ஒத்திகை நூறு பார்த்து
காதலைச் சொல்ல
வந்தேன்
உன் கண்கள் கண்ட
நேரம் மறந்தேனே ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வம்புத்தேன் ...

நண்பர்களுடன்
நாம் இருக்கும் போது
" என்னடா உன்உதடு
வர வர ...
சிவப்பாயிட்டே போகுது " என்று ஒரு
நண்பன் கேட்டுவிட்டான்
அவனை சமாளிக்க

தேன் குடித்தால்
இப்படித்தான் ஆகும்
என்றேன்
தேன் குடித்தாலா ... ?
( அவன் விடுவதாக
இல்லை )

வம்புத்தேன் குடித்தால்
இப்படித்தான் ஆகும்
என்றேன்
வம்புத்தேனா ... ?

எல்லோரும் குழம்பிப்
போய் போதுமடாசாமி என்று தலையில் கை
வைத்துக்
கொண்டார்கள்

நீ மட்டும் ...
வெட்கத்தில் நெஞ்சில்
கை வைத்துக்
கொண்டாய் .

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கவிதையும் ... கண்ணீரும் ...

உன்னைப் போன்ற
தேவதைகளைப் பார்த்து ...
என்னைப் போன்ற
இதயங்கள் புலம்பிய
புலம்பலில் இருந்து
தோன்றியது தான்
மொழி


காதலியின் ...
புன்னகை , மௌனம்
இரண்டின்
அர்த்தங்களை தேடித்
தேடி செய்யப்பட்ட
ஆராய்சிகளின்
தொகுப்பு தான்
அகராதி

அப்படியானால்
கவிதையும் ... கண்ணீரும் ...?

அவை காதலின்
வேதங்கள் .

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

அலைபேசியில் தமிழில் செய்திகளை படிக்க !

நீங்கள் அலைபேசியில் GPRS
உபயோகிப்பவரா ? இனைய செய்திகளை
தமிழில் படிக்க வேண்டும் என்கிற ஆதங்கம் உள்ளவரா ?

நீங்கள் எந்த நிறுவன
தயாரிப்பு அலைபேசி
வைத்திருந்தாலும்
கவலைப்பட தேவையில்லை

முதலில்opera mini
மென்பொருள் உள்ளதா
என்று பாருங்கள் .
இல்லை என்றாள்
மென்பொருளை
இறக்குங்கள் .

பிறகு கீழே சொல்லப்படும் வழி
முறையை சரியாக
பின்பற்றுங்கள்

முதலில்
opera mini
browser ல் நுழைந்து பின்
web address
அடிக்கும் இடத்தில்
உள்ள WWW. ஐ
நீக்கி விட்டு
opera:config
என்று அடித்து ok
கொடுக்கவும்

இப்போது
opera mini seting
வரும் இதில் கடைசிக்கு முன்
use bitmap fonts
for complex scripts என்று
இருக்கும் இடத்தில்
yes என்று பதிவு
செய்யவும்

பிறகு save ல் சென்று save என்று
பதிவு செய்யவும்
பிறகு வெளியேறவும்

இப்போது இனையதள
முகவரி அடிக்கும்
இடத்தில் ஏதேனும்
தமிழ் இனைய முகவரி அடியுங்கள்
உதாரனம் (WWW.tamilyale.
blogspot.com)
உங்கள்
அலைபேசியில்
இப்போது தமிழ் எழுத்துக்கள் வருவதை காணலாம்
( இதற்கு முன் தமிழ்
எழுத்துக்கள் கட்டங்
கட்டமாக வரும் )

இந்த தகவலை
எனக்குச் சொன்னவர்
தோழர் தமிழ் மீரான் .

நீங்கள் அவருக்கு
நன்றி
கூறுவதானால்
கருத்துரையில் பதிவு
செய்யுங்கள்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

சூரியனைச் சுட்ட நெருப்பு (பாரதி ...)

பாரதி ... நீ
சூரியனைச் சுட்ட நெருப்பு- புயலை எரித்த புதுத் தென்றல்
மலையை உடைத்து எரிந்த தமிழ் உளி

நீ ... உன் எழுத்து ஏவுகணைகளை ஏந்தியபோதுதான் அந்த பருத்த பீரங்கிகளுக்கும் பயம்வந்தது

கருவை மட்டும் சுமந்த எங்கள் பெண்கள் கவியை சுமந்ததும்உன்னாள் தான்

தமிழ் தாயும் மார்தட்டிக்
கொள்கிறாள் உன்னாள் தமிழ்பபாலை எங்களுக்கு முலை ஊட்டியதற்காக

உன் கனல் வரிகளைக்
கொஞ்சம் கடன் கொடுப்பாயா எங்கள் உரிமைக்கூழ் காய்ச்ச உலை வைக்க வேண்டும்.

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com