செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

மறந்தேனே ...

உன்னை மட்டும்
நினைத்தேன்
உயிருக்குள்
விதைத்தேன் என்
நிழலையும் இன்று
தொலைத்தேன்

கண்கள் என்னை
விழுங்க கை
வளையல் குழுங்க
என் கனவினை
மென்று திண்று இன்று
செரித்தாய்

சூரியனும் இனிக்கும்
சந்திரனும் கொதிக்கும்
உன் முகத்தை பார்த்து
விட்டால் எனக்கோ
நெஞ்சுக்குள்ளே
தீப்பிடிக்கும்

ஒத்திகை நூறு பார்த்து
காதலைச் சொல்ல
வந்தேன்
உன் கண்கள் கண்ட
நேரம் மறந்தேனே ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக