வியாழன், 2 செப்டம்பர், 2010

தெளிந்த நல்நீரும் காற்றும்

நாகரீகச் சேறு வழுக்கி
நவீனப் பள்ளத்தாக்கில்
விழுந்து மரணத்தோடு
போராடும் மனிதனுக்கு
அவசரத்தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

கூவ நீருக்கும்
குழாய் நீருக்கும்
தற்சமயம் நிறபேதம்
மட்டும் தான்
இனி குடிமட்டுமல்ல
குடிநீரும் குடியைக்
கெடுக்கும்

கந்தகமும்
கரியமிலமும் காற்றோடு
கலப்புமணம்
புரிந்ததால்
சுத்தக்காற்று
வார்த்தையில் மட்டும்

இனி காச நோயினும்
காற்று நோய்
கொடியது

நிக்கோடினால்
தேய்பிறையான
நுரையீரலுக்ககும்
ஒளிச்சேர்க்கைக்கும்
கூட திறனிழந்த
இளந்தளிர்களுக்கும்
அவசியத் தேவை
தெளிந்த நல்நீரும்
காற்றும்

எழுதியது .
பள்ளித்தேழன்
கு.கண்ணன்
( தீயனைப்புத்துறை
காவலர் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக