சனி, 25 செப்டம்பர், 2010

நா.முத்துக்குமார் கவிதைகள்

பதின்வயதில் முதல்முறை ஓர்
பேய் பிடித்து ஆட்டுவது

நதிநீரில்
வலைவிரித்து
விண்மீன்கள்
மாட்டிவது

ரதி என்றும் ரம்பை
என்றும் ராப்பகலாய்
புலம்புவது

அதிகாலை அலாரம்
வைத்து விழித்திருந்து
நிறுத்துவது

மதில்சுவர்
நண்பர்களை
மறைந்திருந்து
கழட்டுவது

குதிரினிலே நெல்லை
போல் வார்த்தைகளை
நிரப்புவது
எதிரினிலே பார்த்து
விட்டால் வழக்கம்
போல் சொதப்புவது

பதில் தெரியா
கேள்வியுடன் பல
கடிதம் நீட்டுவது

முதிர்கண்ணன் ஆன பின்பும் முதல்
தழும்பை போற்றுவது
ஃஃஃஃ அதுதாம்பா ஃஃஃ ஃஃஃஃஃ காதல் ஃஃஃஃஃஃ
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக