ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

காதல் கவிதைகள்

இந்த இரவையே
உனக்கு கடிதமாக
அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா
-பழநிபாரதி

பகலெல்லாம் உன்னை
ஒளிப்பதிவு
செய்கிறது சூரியன்.
இரவில் ...
ஒளிபரப்புகிறது
நிலவாக
-கட்டளை ஜெயா

முத்தத்தைப் பருகி
மட்டுமே உயிர்வாழ
முடியுமா என்ன
காதலில் முடியும்

தேவதைக்கும்
இராட்சசிக்கும்
ஒற்றுமைகள்
உண்டென்று
கூறினால்
காதலிக்காதவர்கள்
நம்பமாட்டார்கள்
-விஜய் மில்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக