ஞாயிறு, 20 ஜூன், 2010

இளைஞனே...

உனக்குளளும் ஒரு சுனாமி அலை
சும்மாய் கிடக்கலாம்
ஒரு யுக நெருப்பு
உறங்கிக் கொண்டிருக்கலாம்
அதை முதலில் எழுப்பு
உனது இலட்சியம்
உயிர் பெரும்

நான் யார் ?
என்பது அறி உறக்கத்தை
உறங்கச் சொல்
உனை நெருங்க வேண்டாம்
உரக்கச் சொல்

கடல் தாண்டியும்
கல்வி கல்
பயிற்சி முடிந்ததும் பாரதம் திரும்பு

அன்னை பூமிக்காக
அயராது உழை
நிரந்தர வெளிநாட்டுப் பணி நிச்சயம் வேண்டாம்

அடிமை முத்திரை குத்திக் கொள்வதில் இனியும்
ஆனந்தப்படாதே

கவலை கொல்
கவிதை கொள்
இதயம் முழுவதும்
இலட்சியத்தால் நிரப்பு

வெல்வதற்கே தோல்வி
எழுவதற்கே வீழ்ச்சி

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
மட்டுமல்ல...

உன் வாழ்க்கை கூட
உன் கையில் தான்
உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக