திங்கள், 28 ஜூன், 2010

மேகமே... மேகமே...

எங்கே கிளம்பபி விட்டீராகள் எநத
கிராமத்து நீரை
கொள்ளை அடிக்கப்போகிறீர்கள்

நீங்கள் பல்லக்கில்
ஏறி பவனி வரும்போது
எங்கள் பக்கத்து
கிராமத்திற்காக
கொஞ்சம் கண்ணீர்
வடியுங்கள்
வறண்டு கிடக்கும்
வயல்கள் வாழ்க்கை
பெறட்டும்

வானம்பாடிகள் வந்து
முறையிட்டுமா
தெரியவில்லை ?
அங்கு ஒருவனாந்திரம்
பாலையானது

நீ...
இரத்தம் சிந்தாமல்
நாங்கள்
இரணப்பட்டது போதும்

எப்போதும் இல்லா
விட்டாலும்
அவ்வப்போது எங்களுக்காக
அழுதுவிடு

உனது நீலிக்கண்ணீர்க்காகவே
பல நிலங்கள்
நித்திரையின்றி
கிடக்கின்றன

போதும் போதும்
அந்த நிலவை துரத்தித்
துரத்தி சோறு
ஊட்டியது போதும்
இங்கே பல குழந்தைகள் பழைய
கஞ்சிக்கு வழியில்லாமல்
கிடக்கின்றன

சீக்கிரம்... சீக்கிரம்...
அந்த உச்சிச் சூரியனை உந்தன் சிப்பாய்களைக்
கொண்டு
சிறைபிடித்து வை

களைப்பாற வேண்டும்
எங்கள் கடலைக்காட்டு
விவசாயி

--------------------------------------------------------------
Ovi Mail: Create an account directly from your phone
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக