செவ்வாய், 29 ஜூன், 2010

மரங்களைக் காப்போம் மானுடம் காப்போம்

என் மடியில் தான்
தூங்கினாய் ...என்
விரல்பிடித்துத் தான்
நடைபழகினாய்

உன் ஆரம்பக்கல்வி
என்னோடுதான் ...

விடுமுறை நாட்களில்
என்னுடன்விளையாட வருவாய் ...

ஒரு மழைக்காலத்தில்
என்னுடன் இருக்கும் போதுதான்
உன் காதலியை சந்தித்தாய்

திருமணத்திற்கு
பந்தற்கால் போட்டதிலிருந்து
வீட்டிற்கு வாசற்கால்
வைத்தது வரை
நான் தான்...


அறுபதுகளில்...
தனியாய் எங்கும்
போகமுடியாததால்
இரண்டாம் தாரமாய்
என்னை கட்டிக்
கொண்டாய்

உன் ...இருதி யாத்திரையிலும்
எனக்கு பங்குண்டு

இப்பொழுது கூட
உன்னையும் கேட்காமல் என்னையும் கேட்காமல்
உடன்கட்டை ஏற்றியிருப்பதும்
என்னைத்தான்...

நான்... நான்தான்
மரம் ...

மரங்களைக்
காப்போம் ...
மானுடம் காப்போம் ...

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக