வியாழன், 15 செப்டம்பர், 2011

இரண்டு கருப்பைகள் இருந்த அதிசயப் பெண்

மருத்துவ உலகில் ஒரு அதிசயம் ?
பீகாரில் ஒரு பெண்
இரண்டு கருப்பைகளில்
தனித்தனியாக ஜனித்த
2 ஆண்
குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பொதுவாக
பெண்களுக்கு ஒரு கருப்பை தான்
இருக்கும். 50 மில்லியன் பெண்களில்
யாராவது ஒருவருக்கு 2 கருப்பைகள்
இருக்கும்.
பீகார் தலைநகர் பாட்னாவின் வட
பகுதியிலுள்ள மதுராபூர்
சாகியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்
ரிங்கு தேவி (28). அவரது கணவர்
ராணுவ புலனாய்வு அதிகாரி.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த
அவரை முசாபர்பூரில் உள்ள
மாத்தி சதான் பாரிஜாத் நர்சிங் ஹோமில்
பிரசவத்திற்காக சேர்த்தனர். கடந்த
வெள்ளிக்கிழமை அவருக்கு சிசேரியன்
முறையில் 2 ஆண் குழந்தைகள்
பிறந்தன.
2 குழந்தைகள் பெற்றெடுத்ததில்
ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால்
அந்த குழந்தைகள் 2 கருப்பைகளில்
ஜனித்துள்ளது. இது மருத்துவ உலகில்
ஒரு அதிசயமாகும்.
இரண்டு கருப்பைகளில்
உருவாகி பிறக்கும் குழந்தைகள் மிகக்
குறைந்த எடையுடன்,
குறைமாதத்தில் பிறக்கும்
வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும்
இத்தகைய பிரசவத்தில்
குழந்தைகளுக்கோ,
தாய்க்கோ ஆபத்து ஏற்படலாம்.
ரிங்குவின் குழந்தைகள் இரண்டும் 1.5
கிலோ, 2 கிராம் எடையுடன்
பிறந்துள்ளன. சிசேரியன் முறையில்
பிறந்தாலும் தாயும், சேயும் நலமாக
உள்ளனர். ரிங்குவிற்கு கடந்த 4
ஆண்டுகளுக்கு முன்பு சுக
பிரசவத்தில்
ஒரு குழந்தை பிறந்துள்ளது.
எனக்கு இரட்டையர்கள்
பிறக்கப்போகிறார்கள் என்று தெரியும்.
ஆனால் பிரசவ வலியின்போது தான்
எனக்கு 2 கருப்பைகள்
இருப்பது தெரியும்
என்று ரிங்கு தெரிவித்தார

புதன், 14 செப்டம்பர், 2011

1929 ல் பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது பற்றி அப்போது ஆனந்த விகடன் எழுதிய கட்டுரை

பகத்சிங் அவர்களும் பட்டுகேஸ்வர் தத்
என்பவரும் திட்டமிட்டபடி, 1929
ஏப்ரல் மாதம் 8ம்
திகதியன்று சட்டசபையில்
குண்டுகளை வீசிவிட்டு, ‘இ;ன்குலாப்
ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டார்கள்.
இந்திய அரசியல் வரலாற்றில் இந்த
முழக்கம் அன்றுதான்
முதல்முறையாகக கேட்டது. பின்னர்
கையிலிருந்த துப்பாக்கியால்
மேல்நோக்கிச் சுட்டுவிட்டு,
ர்.ளு.சு.யு யின்
துண்டறிக்கைகளை வீசி எறிந்தார்கள்.
பிறகு தாங்களாகவே முன்வந்து கைதாகினார்கள்.
இன்று பகத்சிங்கைப்
புகழ்ந்து எழுதுகின்ற ஆனந்தவிகடன்
பத்திரிகை அன்று பகத்சிங்கின் இந்த
நடவடிக்கை குறித்து என்ன
எழுதியது தெரியுமா? நேயர்களே,
1929ம் ஆண்டு (அப்போது மாத
இதழாக வெளிவந்த ஆனந்தவிகடனின்)
மே மாத இதழில், பகத்சிங்கின்
செய்கையைக் கண்டித்தும்,
கேலி செய்தும் வெளியான
அக்கட்டுரையின்
ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.
“இரண்டு இளைஞர்கள் திடீரென
எழுந்து இரண்டு அசல்
வெடிகுண்டுகளை எறிந்துவிட்டு,
கைத்துப்பாக்கிகளால்
ஆகாயத்தை நோக்கிச் சுட்டார்களாம்.
இந்த இளைஞர்கள் இருவருக்கும்
முழுமூடச்சிகாமணிகள்’ என்ற
பட்டத்தை விகடன் அளிக்க
விரும்புகின்றான். முதலாவதாக,
மகாத்மாவின் சத்தியாக்கிரகப்
பீரங்கியினால் தகர்க்க முடியாத
அதிகாரவர்க்கத்தை வெங்காய
வெடியினாலும், ஓட்டைத்
துப்பாக்கியாலும் பயமுறுத்த அவர்கள்
எண்ணியது மூடத்தனம். . . இந்திய
குடியரசின் சேனாதிபதி என்பதாகக்
கையொப்பமிட்டு, சிரிப்பதற்கு விடயம்
தந்ததின் பொருட்டு விகடன் மிகவும்
நன்றி செலுத்துகின்றான்.
(ஆனந்தவிகடன்-1929 மே இதழ்)
ஆனால் பகத்சிங் அவர்களும்
பட்டுகேஸ்வர் தத் அவர்களும் கொடுத்த
வாக்குமூலத்தைக் கேளுங்கள்
நேயர்களே!
“நாங்கள் வெடிகுண்டு எறிந்தோம்.
எந்தத் தனிநபரையும் நோக்கி நாங்கள்
வெடிகுண்டு போடவில்லை.
சட்டசபை பயனற்றது என்று கருதி அதன்மீது போட்டோம்.
சட்டசபை இருந்து என்ன பயன்?
மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகள்
அசட்டை செய்யப்படுகின்றன.
சட்டசபையினால் யாதொரு நன்மையும்
கிடையாது. ஏழைமக்கள் படும்துயர்
சொல்லி முடியாது. இங்கிலாந்தைக்
கனவிலிருந்து தட்டி எழுப்ப
வேண்டுமென்றால்
வெடிகுண்டு போடவேண்டியதுதான்!. . .
கொலை செய்யவேண்டும்
என்று எண்ணியிருந்தால்
அவ்விதமே செய்திருப்போம். அநீதியாக
உள்ள தற்கால சமூகவாழ்வையும்,
அரசியலையும்
போக்குவதே புரட்சியாகும்…. . .
ஒரு மனிதனின் நலத்தை, மற்றொருவன்
பறிப்பதும் ஒரு தேசத்தின்
நலத்தை மற்றொரு தேசம் பறிப்பதும்
ஒழிய வேண்டும்.. . . நாங்கள்
எச்சரிக்கை செய்துள்ளோம். இந்த
எச்சரிக்கை மதிக்கப்படாமல் போனால்,
தேசத்தில் பெரிய புரட்சி தோன்றும்.
அக்காலத்தை, நாம் எதிர்பார்க்கின்றோம்.
புரட்சி என்ற பலிபீடத்தில்
எங்களது இளமையை நாங்கள்
அர்;ப்பணிக்கின்றோம். எத்தகைய கஷ்ட
நஷ்டம் நேரினும் சரி,
அதனை அனுபவிக்க நாங்கள் தயார்.
‘புரட்சி ஓங்குக! புரட்சி ஓங்குக!’
எவ்வளவு தெளிவாக, தீர்க்கமான,
வீரமான வாக்குமூலம்! இந்த
வீரமிகு செயலைத்தான்
ஆனந்தவிகடன் பத்திரிகை கிண்டல்
செய்து எழுதியது.

நன்றி
tamilnation.org
இந்த கட்டுரையின் ஆசிரியர்
சன்முகம் சபேசன்

கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்

ஏ இந்தியாவே...!
எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்றுமிச்சம்
உண்டு என்னிடம்....
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப்
பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம்
அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய்
விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின்
ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப்
போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப்
பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை
ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம்
கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம்
தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல்
எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய
அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம்
பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக்
கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள்
ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக
எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம்
பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில்
அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம்
செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல்
பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற
சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து
கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம்
நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில்
போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல்
போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல்
கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல்
போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப்
போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்!
நிரந்தரமாகப் போகட்டும்!
-கவிஞர் தாமரை
..........
பின்குறிப்பு:
உங்கள்
குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்
குழந்தைகளே...

அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன்
குழந்தைகள் சிரிக்கட்டும்!

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இரத்தம் குடிக்கும் மனிதர்கள்

நவீன உலகத்தில்
ஆடு மாடுகளை விட
அதிகம் அடிமைப்
படுத்தப்படுவது
தொழிலாளர்கள் தான்
நொடிக்கு நொடி
ஒவ்வொரு தொழிலாளியின்
இரத்தமும் வியர்வையும்
உறிஞ்சப்படுகிறது
அதைப்பற்றிய கவிதை
இதோ

வேலை தர
முதன் முதலில்
முதலாளி கோரியது
என் சிறகுகளில்
இருந்து சில
இறகுகளை

வேலைக்கு சேர்ந்த
சில நாட்களில்
என்னைப் பாராட்டி
இரண்டு இறகுகளை
வாங்கிக் கொண்டார்

சில மாதங்களுக்குப்
பிறகு சில சூழ்நிலை
களை முன் வைத்து
மூன்று இறகுகளை
பெற்றுக் கொண்டார்

பின்னொரு நாள்
வேலையை
தக்கவைத்துக் கொள்ள
வேண்டுமாயின்
சில இறகுகள்
வேண்டுமென்று
மறைமுகமாய் மிரட்டி
பிடுங்கிக் கொண்டார்

சிறகுகளற்ற நான்
உயரத்தில் பறக்கும்
முதலாலியைப்
பார்க்கிறேன்
என் இறகொன்றால்
தன் காது குடைந்தபடி
அவர்
இறகேதும்
முளைத்துள்ளதா
எனக் குனிந்து
என்னைப் பார்க்கிறார்
-ஆனந்த விகடன்

சனி, 22 ஜனவரி, 2011

மரச்சிற்பங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

திங்கள், 13 டிசம்பர், 2010

எம்.பி எனும் ஏழைகள் !

இட்லி 4 ரூ
தோசை12 ரூ
சாப்பாடு 30 ரூ டீ4 ரூ
என்று கடைகளில்
சாப்பிட்டுக்
கொண்டிருக்கும்
தமிழக மக்களுக்கு
ஒரு நற்செய்தி

இந்தியாவிலேயே
குறைந்த செலவில்
உணவு கிடைக்கும்
இடம் ஒன்று உள்ளது
அங்கு டீ 1 ரூ
சோப்பு 5.50 ரூ
சாப்பாடு 2 ரூ
சப்பாத்தி 1ரூ
சிக்கன் 24.50 ரூ
தோசை 4 ரூ
காய்கறிபிரியானி 8 ரூ
மீன் 13 ரூ

இந்த இடத்தில்தான்
இந்தியாவின் மொத்த
ஏழைகளும் சாப்பிடு
கிறார்கள்

அந்த ஏழைகளின்
மாத சம்பளம்
எவ்வளவு தெரியுமா ?
80,001

அந்த ஏழைகள் யார்
தெரியுமா ?
இந்திய நாடாளுமன்ற
உறுப்பினர்கள்

உணவு கிடைக்கும்
இடம் நாடாளுமன்ற
உணவகம்

என்ன எல்லோரும்
நாடாளுமன்ற
உறுப்பினர் ஆக
தயார்ஆயிட்டீங்களா ?

வியாழன், 9 டிசம்பர், 2010

மரச்சிற்பங்கள்

தேழர்களே ...
நம் வீடுகளில் வரவேற்பறையை
அலங்கரிக்கவும்
குழந்தைகள் விளையாடவும்
மரத்தினாலான
பொம்மைகள்
வாங்குவீர்கள்
செலவும் அதிகம்
பிடிக்கும்

இதோ நீங்களே
செய்யும்படியான சில
எளிமையான மாதிரிகள்

உதிரிபாகங்களாக
செய்து அவைகளை
குழந்தைகளுக்கு
விளையாட
கொடுப்பதால்
பாகங்களை
இணைத்து உருவங்களை
உருவாக்குவதால்
குழந்தைகளின் அறிவும்
வளர்சியடைகிறது

முயற்சி செய்து
பாருங்கள்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

புதன், 1 டிசம்பர், 2010

மரச்சிற்பங்கள்

நீங்கள் கலைஞரா புதிதாக ஏதேனும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம்
உடையவரா

இதோ
உங்கள் குழந்தை விளையாட மரத்தினால் ஆன பொம்மைகளுக்கான
மாதிரிகள்

இந்த மாதிரிகளைப்
பார்த்து நீங்களே
உங்கள் அன்பு பாப்பாவுக்கு செய்து
கொடுங்கள்

சனி, 30 அக்டோபர், 2010

வாக்காளர்பட்டியலில் உங்கள் பெயர்பார்க்க

நாம் வாக்காளர் பட்டியலில்
பெயர்சேர்க்கவும்
எழுதிக் கொடுத்த பெயர் பட்டியலில்
இடம் பெற்றதா என்று
அறியவும் நாம் படாதபாடு பட்டிருக்கிறோம் இனி
கவலை வேண்டாம்

தேர்தல் ஆனையம்
வாக்காளர் பட்டியலை
இனையத்தில் வெளிவிட்டிருக்கிறது
இதன்மூலம் நம் பெயரை சரிபார்த்துக்
கொள்ளலாம்
முகவரி இதோ
www.elections.tn.gov.in/eroll/
( இதை கிளிக் செய்க )
இதில் முதலில்
மாவட்டம் பின் தொகுதி பெயரை கொடுக்க ஒரு அட்டவனை வரும் அதில் வாக்காளர்
பெயர், தாய் , தந்தை,
கணவர் பெயர்களை கொடுக் பட்டியலில் நம் பெயர் முகவரி
வாக்குச்சாவடி பெயர் என அனைத்து விவரங்களும் வருகிறது

தேர்தல்
ஆனையத்திற்கு நன்றி
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 14 அக்டோபர், 2010

புகைக்கும் தோழர்களே ...

கீழே உள்ள படங்களை புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நண்பர் சந்ரமோகனிடம்
காட்டி என்ன சொல்ல
தோனுது என்றேன்

இதோ அவர் சொன்ன
தத்துவங்கள்


இவ்ளோ
குடிச்சானுகளே
ஒன்னாவது எனக்கு
கொடுத்தானுகளா
பாவிக


இதுல வாய்
எங்க
இருக்கு


பஞ்சு வந்தது கூட
தெரியல நாய
இனியாவது குழல்(PIPE)
வாங்கி சொருவிக்கோ


ரெம்ப யோசிக்காத
எல்லா எங்களோடதான்

ஒரு சிகரட் புகைய
எத்தன பேர்தான்டா
இழுப்பீங்க


இன்னு ஏன்டா அத
வாயில வச்சுட்டு
இருக்க


பஞ்சையாவது
மிச்சம்
வச்சானே

புதன், 6 அக்டோபர், 2010

தபூ சங்கர் கவிதைகள்

நான் வழிபட இந்த
உலகத்தில்
எத்தனையோ கடவுள்
இருக்கின்றது
ஆனால் நான்
காதலிக்க இந்த
உலகத்தில் நீ மட்டும்
தான் இருக்கிறாய்

சிந்தும் மழை மீண்டும்
மேகத்துக்குள் போவது
இல்லை ஆனால்
நீ சிந்தும் வெட்கம்
மெல்லாம் மீண்டும்
உன்
கன்னத்துக்குள்ளேயே
போய்விடுகிறது

என் சின்ன இதயத்தில்
உன்னை எப்படி குடி
வைக்கப் போகிறேன் என்றிருந்தேன்
நீ உள்ளே நுழைந்ததும்
என் இதயம்
பெரியதாகி விட்டது

நில உச்சவரம்பு
சட்டம் போல
அழகு உச்ச வரமபுச்
சட்டம் பேட்டுத்தான்
உன் அழகின்
கொட்டத்தை அடக்க
வேண்டும்

புதிய புடவை
எப்படி இருக்கு
என்றாய்
நல்லா இல்லனு
சொல்லு என்று
கெஞ்சியது நீ
களைந்து கொடியில்
போட்டிருந்த புடவை

நீ முகம் கழுவுகையில் ஒடிய
தண்ணீரைப் பார்த்து
திடுக்கிட்டு விட்டேன்
நான் ஒவ்வொரு
நாளும் இவ்வளவு
அழகையா வேண்டாம்
என்று நீ நீரில்
விடுகிறாய்

இந்தக் காதல் கடிதம்
கொண்டு வருபவனைக்
காதலிக்கவும்
இவன் உனக்காகப்
படைக்கப்பட்டவன்
இப்படிக்கு
இறைவன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 5 அக்டோபர், 2010

பா.விஜய் கவிதைகள்

புதிது புதிதாக எழுதச்
சொல்கிறார்கள்
உன் பழைய
ஞாபகங்களைத் தான்
கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற
கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே
அற்புதமான
அன்பளிப்பு இந்த
வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா

இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்
நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன்
வானியல்
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வெள்ளி, 1 அக்டோபர், 2010

பா.விஜய் கவிதைகள்

தீயின் திறப்புவிழா
உன் புன்னகை

நீ
வாசத்தை உற்பத்தி
செய்யும் நாணத்
தொழாற்சாலை

குனிந்து நகரும்
கோபுரம்

நிமிர்ந்த நிலவே
கண்ணுக்குத்
தெரியாத பூக்கள்
உனக்கு வாசமானது
கண்ணுக்கு தெரியும்
கனிகள் உனக்கு
வசீகரமானது

மலராயுதம் நீ

நீ முகத்தை துடைத்த
கைக்குட்டையில்
ஒட்டியிருந்தது
சில வானவில்கள்

அருவிகளை என்
கண்களுக்கு தந்து
விட்டு எங்கே நீ
குளிக்க சென்று
விட்டாய்
(தொடரும்)
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

இந்த மார்புக்
கச்சையை கண்டு
பிடித்த மாமனிதன்
ஆணாகவே இருக்க
வேண்டும்
ஏனென்றால்
அலைகளைக் கட்டிப்
போடும் அவசியம்
கடலுக்குத் தெரியாது

நீ போனபிறகும்
கேட்டுக் கொண்டே
இருக்கிறது அந்த
இடத்தில் உன்
கொலுசு சத்தம்

உறக்கத்தை தேடி
கடிதம் போட்டேன்
ஆள் இல்லே என்று
செய்தி வந்தது

பூட்டிப் பூட்டி
வைத்தாலும்
தொலைந்துதான்
போகும் காற்றும்
காதலும்

உலகில் பொய்கலை
எல்லாம் ஒன்றாக
சேர்த்த போது ஒரு
பெண்ணின் புன்னகை
கிடைத்தது
ஏமாற்றங்களை
எல்லாம் ஒன்றாய்
சேர்த்த போது ஒரு
ஆணின் கண்ணீர்
கிடைத்தது

சுவடுகள் இல்லாமல்
நடந்து போகிறது
காற்றும் என் காதலும்

மண்ணைப்
பிசைந்தால் பாண்டம்
மனசைப் பிசைந்தால்
காதல்

மூச்சு முட்ட கவிதை
தின்றுவிட்டு
படுத்துப் புரண்டு
கொண்டிருக்கும்
பல்கலைக்கழகம் நீ

(தொடரும்)

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

பா.விஜய் கவிதைகள்

சில்மிசியே கவிதை
தொகுப்பில் இருந்து
தொகுக்கப்பட்டவை

நெருப்பிற்கு ருசி
உண்டு உன்
இதழ்களைக் கொடு
ருசிக்கிறேன்

ஃ கடல் உன்மார்பு
அதனால்தான்
கரையோரம்
தளும்புகிறது

ஃ லட்சக்கணக்கான
வீரர்களுக்கு முன்
ஒருவனாய்
உனக்கு முன் நான்

ஃஉன் ஆனவத்தை
விட அழகானது
உன்னிடம் எதுவும்
இல்லை

ஃ ஒர் அரங்கமே
கை தட்டியது போல்
இருந்து நீ இமைகளை தட்டியதும்

ஃ நீயும் நானும்
சேர்ந்தால் அது இயல்
இசை நாடகம் அல்ல
இதழ் இசை நாடகம்

ஃ இலக்கணம் மீராத
உன் இளமைக்கனம்
வாழ்க

ஃ காற்றும் காதலும்
சன்னல் வழி
வருகிறது கதவுவழி
சென்றுவிடுகிறது

ஃ இளமைப் படகே
உன்னால் கவிழ்ந்த
நதி நான்

ஃ முடிந்தால் வந்து
பார்த்து விட்டுப் போ
இறந்து கிடக்கும்
என் அமைதியை

ஃ கிளைகளை மூடும்
அவசரத்தில் கனிகளை
இலேசாய்
தெரியவிட்ட அப்பாவி
மரம் நீ

ஃ முன்
அறிவிப்பில்லாத
யுத்தங்களை உன்
முந்தானைகள்
செய்கின்றன

ஃ நீ உலக அதிசயம்
அல்ல உலக ரகசியம்

ஃ நீ பல்கலைக் கழகம்
அல்ல
கள்கலைக்கழகம்

ஃ காய்சல் அடிக்கிறது
ஒரு டீஷ்பூன் வெட்கம்
தா

ஃ உற்பத்தியான இடத்திற்கே திரும்பத்
திரும்ப வரும் நதி
காதல்தான்

ஃ உன் நெற்றியில்
முத்தங்களை
பயிரிட்டேன்
கண்ணங்கள்
வெட்கத்தை
அறுவடை
செய்கின்றன

ஃ மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழவகைகள்
உன்னிடம் மட்டுமே
உண்டு

ஃ எப்படியாவது இன்று
இரவு கண்டுபிடித்து
விட வேண்டும்
வெட்கம் உன்
உடம்பில்
ஆரம்பிக்கும் இடத்தை

ஃ இலேசான
இதயங்களில் தான்
கனமான காதல்
தோன்றுகிறது

ஃ நீ மேற்கின்
சிவப்பில் கிடைத்த
சிவப்பு

ஃ தராசுத் தட்டில் என்
ஆயிரம் இரவுக்
கண்ணீரை
வைத்தேன் நீ மறு
தட்டில் ஒரே ஒரு
புன்னகையை
வைத்தாய் சமம்

ஃ சொர்கத்தை ரசிக்கும்
திருட்டு வழி
உன் படுக்கை அறை
ஜன்னல்

ஃ நஞ்சும் காதலும்
தலைக்கு
ஏறிவிட்டால்
இறங்காது

ஃ நீ எனக்கு குளிர்கால
கூட்டத் தொடர்

ஃ ஒரு பெண்ணின்
இடையின் சுற்றளவும்
ஆனின் கைநீளமும்
ஒன்று

ஃ ஆள் கொல்லி
மிருகங்கள் காட்டில்
திரிகின்றன
உயிர் கொல்லி
மிருகங்கள்
தாவணியில்
திரிகின்றன

ஃஇரட்டை ஜடை
துப்பாக்கியே உன்
தோட்டாக்கள் என்ன
மல்லிகை
மொட்டுகளா

ஃ உடம்பை மறைக்க
உடை கண்டு
பிடித்தவனை விட
எதை எதை
மறைக்க வேண்டும்
என்று கண்டவனே
ரசனாவாதி
(தொடரும்)

காதல் கவிதைகள்

இந்த இரவையே
உனக்கு கடிதமாக
அனுப்புகிறேன்
அஞ்சல்தலையாய்
அந்த நிலா
-பழநிபாரதி

பகலெல்லாம் உன்னை
ஒளிப்பதிவு
செய்கிறது சூரியன்.
இரவில் ...
ஒளிபரப்புகிறது
நிலவாக
-கட்டளை ஜெயா

முத்தத்தைப் பருகி
மட்டுமே உயிர்வாழ
முடியுமா என்ன
காதலில் முடியும்

தேவதைக்கும்
இராட்சசிக்கும்
ஒற்றுமைகள்
உண்டென்று
கூறினால்
காதலிக்காதவர்கள்
நம்பமாட்டார்கள்
-விஜய் மில்டன்

சனி, 25 செப்டம்பர், 2010

நா.முத்துக்குமார் கவிதைகள்

பதின்வயதில் முதல்முறை ஓர்
பேய் பிடித்து ஆட்டுவது

நதிநீரில்
வலைவிரித்து
விண்மீன்கள்
மாட்டிவது

ரதி என்றும் ரம்பை
என்றும் ராப்பகலாய்
புலம்புவது

அதிகாலை அலாரம்
வைத்து விழித்திருந்து
நிறுத்துவது

மதில்சுவர்
நண்பர்களை
மறைந்திருந்து
கழட்டுவது

குதிரினிலே நெல்லை
போல் வார்த்தைகளை
நிரப்புவது
எதிரினிலே பார்த்து
விட்டால் வழக்கம்
போல் சொதப்புவது

பதில் தெரியா
கேள்வியுடன் பல
கடிதம் நீட்டுவது

முதிர்கண்ணன் ஆன பின்பும் முதல்
தழும்பை போற்றுவது
ஃஃஃஃ அதுதாம்பா ஃஃஃ ஃஃஃஃஃ காதல் ஃஃஃஃஃஃ
--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

வியாழன், 16 செப்டம்பர், 2010