புதன், 21 ஜூலை, 2010

முத்தம் திண்ணும் மோகினி


* உனக்கு கொடுத்த காதல் புத்தகத்தை
படித்து விட்டாயா ?
எப்படி இருக்கிறது ?
என்று கேட்டேன்

நீயோ ...
இரவல் கவிதைகளை
நான் எப்படி ரசிக்க
முடியும் என்று கேட்டாய்

இதோ உனக்காக
உனக்காக மட்டும்
எழுதுகிறேன்


* வாழ்க்கை
ஒரு தவம்

காதல் ... ?
அது
தவத்தில் தவம் !


*காதல் ...
வரங்கள் கொடுக்கும்
தேவதை - அதுவும்
வாரிக்கொடுக்கும்
தேவதை

அப்படியானால்
நான் ? என்கிறாயா

நீ ...
அந்த காதலையே
வரமாய்த் தந்த தேவதை


* நீ ...
தூரத்தில் பேரழகி

என்னைத் துரத்துவதில்
போர் அழகி !


* நான் உன்னை
அணுவிலும் அணுவாய்
காதலிக்க வேண்டும்

நான் அழுகின்ற
வரையில் காதலிக்க
வேண்டும்

காதல் அழிகின்ற
வரையில் காதலிக்க
வேண்டும்



* நீ என்னைக்
கேட்கிறாய் - அதுவும்
திண்ணக் கேட்கிறாய்

உன் கண்களிலே
குழலைச் சொருகி
என் உயிரைக்
குடிக்கப் பார்க்கிறாய்


*இந்த ...
காதல் தேவதையிடம்
விழிக்காத இரவு
உறங்காத உதயம்
இரண்டையும் நான்
கேட்கப்போவதில்லை

ஒன்று
ஒன்றெ ஒன்று மட்டும்
போதும் .,.
நீ என்னுடன்
இருக்கும் போது

* நான்
உன் தாவனிக்
கவிதைகளை படிக்கும்
போதெல்லாம் உனக்கு
எத்தனை ஆனந்தம்

எனக்காகவே மறைத்து
வைத்திருப்பது போல்
ஒழித்து ஒழித்து
காட்டுகிறாய்


நம் முதல் சந்திப்பில்
உனக்கு
தண்ணீர் தேசத்தை
( புத்தகம் ) மட்டும்
தான் பரிசளித்தேன்

நீயோ ...
உன்னையே
( புகைப்படம் )
தந்து விட்டாய்

சரிதான்
ஒரு தேசத்தையே
அடகு வைத்துத் தான்
உன்னே
பெற்றிருக்கிறேன்


இது கனாகானும்
காலம்
என்ன கனவு கண்டேன்
என்கிறாயா ?

தெரியவில்லை
ஆனால்
கனவு முழுவதும்
உன்னை மட்டுமே
கண்டேன்

--------------------------------------------------------------
Ovi Mail: Making email access easy
http://mail.ovi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக