வெள்ளி, 23 ஜூலை, 2010

ஒரு இனிப்பான காரம் ...

(முத்தம் திணணும்
மோகினி
கவிதைகளின்
தொடர்ச்சி )



நீ...
மொத்தமா கேட்பதை
முத்தமா கேட்கிறாய்
முத்தமா கேட்பதையும்
சத்தமா கேட்கிறாய்

* சரி ... சரி சத்தம்
இல்லாம காதோரம் கேட்கிறேன் காலைக் கடனை கடன் சொல்லாமல்
கட்சிதமா தீர்த்திடு

கணக்குக்கும் எனக்கும்
எப்பவுமே ஆவாது
ஒன்னும் ஒன்னும்
சேர்த்து மூனா தரவா ?

* ஐயய்யோ தப்புடா
ஒன்னும் ஒன்னும்
சேர்த்தா பதினொன்னு
பாரடா

இது எந்த ஊர் கணக்கு
* எங்க ஊர் கணக்கு

பதிக்கவா ஒன்னுதான்
* ம்ம்ம்
பதினொன்னு தா

போடி நீயும் உன்
கணக்கும்
*ஏதோ கொடுத்து
கொடுத்து சிவந்து
போன கௌவ்வை
இதழ் கோப்பெருஞ்
சோழன்னு பீத்திக்குற
இனிப்பு ஒன்னு
கேட்டா இல்லீங்கற


நீ கேட்ட இனிப்பு
இப்போதைக்கு இருப்பு
இல்ல ... சுடச்சுட
காரம் இருக்கு
வேணுமா ?

*காரமா ? புதுசா இருக்கே
புதுசு தான்
உனக்காகவே சுடச்சுட
என் உதட்டால
செஞ்சது வேணுமா ?

* அது இது ன்னு
சொல்லி சின்னப்
பொண்ண
ஏமாத்தாதடா ?
வித்யாசம் என்னடா ?


இனிப்பு சாப்டா இரண்டு நாள்ள
திகட்டிடும் முப்பது,
அறுபது
கணக்குக்குள்ள
முடிஞ்சிடும் ஆனா
காரம் சாப்பிட்டா ...
*சாப்பிட்டா ?

காது அடைக்கும்
கண்ணு கலங்கும்
இதழ் இளஞ்சூட்டில்
கொதிக்கும்
உசுருக்குள் அனல்
ரொம்ப அடிக்கும்

இப்ப சொல்லு என்ன
வேணும் ?
இனிப்பா ? காரமா ?


* அப்பப்ப ...
இனிப்பு கொடு
அதிகமா காரம் கொடு

சரியா ?

ம்ம்ம் ... ம்ம்ம் ...
ம்ம்ம் ...


ஐயய்யோ
யாராவது
இருக்கீங்களா ?

* யாரும்
பார்க்கலையே ...
... ..

(உங்கள்
முத்தம் திண்ணும்
மோகினி இதேபோல்
உங்கள்
இதழ் கடித்து காரம்
சாப்பிட்டிருந்தால்
கருத்துரையில்
பதிவு செய்யுங்கள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக