வெள்ளி, 23 ஜூலை, 2010

உதட்டுக்கு ஆகாது ...

( முத்தம் திண்ணும் மோகினிக்
கவிதைகளின் தொடர்ச்சி )

நமது காவிரிக் கரைப்
பூங்கா சந்திப்பில்
முதல் முறையாக
உன் இதழ் வாசித்தேன்

நீயோ ...
கண்கள் வியர்த்து
விட்டாய்

ஏனடி கண்களில் நீர்
வைக்கிறாய்
நான் தவறு செய்து
விட்டேனா ?

* இல்ல

உனக்கு விருப்பம்
இல்லையா ?

* அது இல்ல

உதடு கடித்து
விட்டேனா ?

* அதுவும் இல்ல

பிறகு இந்த நீர் ஏனடி?


நீ ... கண்களைத்
துடைத்துக் கொண்டு
சொன்னாய்

போடா !
ஒற்றை முத்தம்
உதட்டுக்கு ஆகாது
என்பார்கள் !...
அதை நினைத்துத்
தான் ...

( உங்கள்
கருத்துக்களை
கருத்துரையில் பதிவு செய்யுங்கள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக